அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
அவை அடக்கம், நாவடக்கம், ஐம்பொறி அடக்கம், மன வொழுங்கு போன்ற ஒழுக்கம் உடையவர்களே அறிஞர்கள்.
ஆத்திரமாக இருப்போர்கள், பேசத்தெரியாத விசயங்களையோ பேசக்கூடாதவற்றை நாவடக்கம் இல்லாமல் பேசுவோர்கள், உடல் ஒழுக்கம் இல்லாமல் ஐம்பொறிகளையும் அனுபவிக்க விரும்புவோர்கள், மன ஒழுக்கம் இல்லாமல் காம குரோத செயல்களை செய்வோர்கள் போன்றவர்கள் அறிஞர்கள் அல்லர். இதை ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழியாலும் அறியலாம்.
திருவள்ளுவரும் அடக்கமுடைமை என்று அதன் சிறப்பை போற்றுகிறார். எனவே அடக்கம் சிறந்த பண்பாக பேசப்படுகிறது.
No comments:
Post a Comment